(எம்.பஹத் ஜுனைட்)
இலங்கை மற்றும் இந்திய கத்தார் வாழ் ஆளுமைகளை கெளரவிக்கும் ஸ்கை தமிழ் விருது விழா நவம்பர் 30ம் திகதி ஸ்கை தமிழ் பணிப்பாளர் ஜே.எம். பாஸித் அவர்களின் தலைமையில் இந்திய கலாசார மையம் அசோகா ஹோலில் நடைபெற்றது.
இவ்விருது விழாவில் பிரதம அதிதியாக கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் மபாஸ் மொஹிதீன் அவர்கள் கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதியாக இந்திய கலாச்சார மையத்தின் பொதுச் செயலாளர் மோகன் குமார் அவர்களும், சிறப்பு விருந்தினராக இலங்கையிலிருந்து இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர், இலங்கை தேசிய பத்திரிகையான தினகரன் வரமஞ்சரியின் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேல், இந்தியாவில் இருந்து கழக சட்ட திட்ட திருத்தக்குழு இணை செயலாளர் சுபா சந்திரசேகரன், இந்தியா சேது தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் தலைவர் திரு முஹம்மது ஜலீல் மற்றும் Al Wahaa குழுமம் நிறுவனத்தின் தலைவர் Dr. சர்புதீன் அப்துல் ரஹ்மான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இவ்விழாவானது கல்வி, கலை, விளையாட்டு, வணிகம், சமூக செயற்பாடு, ஊடகத்துறை, எழுத்து துறை மற்றும் இலக்கியத்துறை போன்ற துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.