Our Feeds


Thursday, December 28, 2023

News Editor

துறைமுக தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்


 துறைமுகத்தில் இன்று (28) ஆரம்பிக்கப்படவிருந்த சட்டப்படி வேலை செய்யும் நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை துறைமுக பொதுச் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. 


2024, 2026 ஆம் ஆண்டுகளுக்கான சம்பள அதிகரிப்புக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி அகில இலங்கை துறைமுக பொதுச் சேவை சங்கம் இன்று அmடையாள தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்திருந்தது. 


இருந்தபோதும், துறைமுக நிர்வாக அதிகாரியினால் அந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் நீதிமன்றத்தினூடாக பெற்றுக்கொண்ட தடை உத்தரவின் காரணமாக அவர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இவ்வாறு கைவிடப்பட்டுள்ளதாக அகில இலங்கை துறைமுக பொதுச் சேவை சங்கம் அறிவித்துள்ளது. 


ஜனவரி 09ஆம் திகதியின் பின்னர் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்படுமென அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் நிரோஷன் கொரகான தெரிவித்துள்ளாா்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »