பாராளுமன்றத்தில் பெறுமதி சேர் வரி(vat) திருத்தச் சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்துக்காக எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
இதற்காக நாளை பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 20ஆம் திகதி பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய, குறித்த விவாதம் நாளை முற்பகல் 9.30 முதல் மாலை 4.30 வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.