Our Feeds


Friday, December 8, 2023

News Editor

கிழக்கு முனையத்தின் செயல்பாடுகள் ஜூன் மாதம் மீண்டும் ஆரம்பம்


 கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள் அடுத்த வருடம் ஜூன் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

6 நவீன கிரேன்களின் உதவியுடன் கொள்கலன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அதன் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர குறிப்பிட்டார்.

கிழக்கு முனையத்தின் 80% கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அவர் கூறினார்.

இதன் நிர்மாணச் செலவு 825 மில்லியன் ரூபாவாகும்.

கிழக்கு முனையத்தின் கொள்கலன் இயக்க திறன் வருடாந்தம் 20 இலட்சம் என செயலாளர் தெரிவித்தார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »