Our Feeds


Thursday, December 7, 2023

News Editor

கிம்புலாவல தெருவோர உணவுக் கடைகள் நாளை அகற்றப்படும்


 தலவத்துகொட, கிம்புலாவல பகுதியில் அமைந்துள்ள தெருவோர உணவு விற்பனை நிலையங்களை இம்மாதம் 8ஆம் திகதிக்குள் காலி செய்யுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை கடை உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

இந்த கடைகளை அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேல் மாகாண நிறைவேற்று பொறியியலாளர் கையொப்பமிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், அகற்றப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை என்றும், தங்கள் கடைகளை அகற்ற தயாராக இல்லை என்றும், இவ்வாறு அகற்றினால், தங்களது வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என்றும் தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »