Our Feeds


Monday, December 18, 2023

SHAHNI RAMEES

கிரிபத்கொடையில் துப்பாக்கிச் சூடு..!

 

கிரிபத்கொடையில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இன்று (18) அதிகாலை 2.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.



கால சந்தி பகுதியில் அமைந்துள்ள குறித்த விடுதியில் சுமார் 6 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.



எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கிரிபத்கொடை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »