Our Feeds


Thursday, December 7, 2023

News Editor

குழந்தைகளுக்கான போஷாக்குணவுகள், மற்றும் மருத்துவப்பொருட்களுக்கு வரி விதிப்பு அசாதாரண செயல்


 குழந்தைகளுக்கான போஷாக்குணவுகள், மற்றும் மருத்துவப்பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளமை  அரசின் மிகவும் அசாதாரண செயல் என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான ஹர்ச டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (06)  கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

 வரி வருமானம் அத்தியாவசியம் என்று அரசு கூறுகின்றது. ஆனாலும் வரி அறவிடும் முறையில் சாதாரணத் தன்மை ஒன்று இருக்க வேண்டும் என்று நாங்கள் கூறினோம்.

பிரதானமாக குழந்தைகளின் போஷாக்கிற்கு தேவையான உணவு வகைகள்,   உரங்கள், டீசல், மருத்துவ பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. அரச மருத்துவனைகளுக்கு பொருட்கள் கொண்டு வரப்படும் போது அதற்கான முழு செலவையும் அரசாங்கம் ஏற்கும்.

தற்போது தனியார் மருத்துவனைகளுக்கு பணக்காரர், ஏழைகள் என அனைவரும் செல்கின்றார்கள்.ஏனெனில் மருத்துவ உபகரணங்கள் இல்லாமையால் அரச மருத்துவனைகளில் அதிகமான பரிசோதனைகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.ஆகவே தனியார் மருத்துவனைகளிலேயே பரிசோதனைகளை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

இவ்வாறான நிலையில்  குழந்தைகளுக்கான போஷாக்குணவுகள், மற்றும் மருத்துவப்பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளமை  அரசின் மிகவும் அசாதாரண செயல் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »