ஹைலெவல் வீதியில் ஹோமாகம பிரதான பஸ்
நிலையத்திற்கு அருகில் வீதியைக் கடந்த பாதசாரிகள் இருவர் மீது லொறிமோதியதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, மேலுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த விபத்தில் உயிரிழந்தவர் 34 வயதான பகமூன பிரதேசத்தை சேர்ந்தவராவார். காயமடைந்த மற்றைய நபர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.