இலங்கைக்கான இந்தியத் தூதுவர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் கோபால் பாக்லே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது கோபால் பாக்லேவுக்கு மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.பி.ரத்நாயக்க மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.