Our Feeds


Thursday, December 7, 2023

News Editor

மருத்துவ பரிந்துரையின்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உட்கொள்ள வேண்டாம்


 மருத்துவ அனுமதியின்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகளை (Antibiotics) அதிகமாகப் பயன்படுத்துவதால், பாக்டீரியா தொற்றுகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் திறன் வேகமாகக் குறைந்து வருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

இது குறித்து சுகாதார மேம்பாட்டுப் பணியகம் மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

தவறான பயன்பாடு காரணமாக, நோய்க்கிருமி பாக்டீரியாக்கள் தற்போது நம்மிடம் உள்ள மிகவும் சக்திவாய்ந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு கூட எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வேகமாக உருவாகி வருகின்றன. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மனித உயிர்கள் ஏற்கனவே இழக்கப்படுகின்றன.

இன்றே செயல்படுவோம் நம் வாழ்வு மற்றும் எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்பிற்காக. கீழே உள்ள அனைத்து வழிமுறைகளையும் தவறாமல் பின்பற்றுவோம்.

1. தகுதிவாய்ந்த மருத்துவரின் பரிந்துரையின்றி விருப்பப்படி நுண்ணுயிர் எதிர்ப்பிகளை (Antibiotics) ஒருபோதும் எடுத்துக்கொள்ளாதீர்கள்.

2. பரிந்துரைக்கப்பட்ட காலம், டோஸ் மற்றும் நேரத்திற்கு மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகளை (Antibiotics) எடுத்துக் கொள்ளுங்கள்.

3. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் உங்களுக்கு கொடுக்கப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பு(Antibiotics) மூலிகையை வேறொருவருடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

4. எஞ்சியிருக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை (Antibiotics) மீண்டும் பயன்படுத்த வேண்டாம்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »