Our Feeds


Tuesday, December 12, 2023

News Editor

உயர்கல்வியை அபிவிருத்திக்கு பயன்படுத்த திட்டம் - - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க


 பல்கலைக்கழகக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி கல்வியை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்வதற்கு அறிவாற்றல் மிக்க மனித வளம் தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பல்கலைக்கழகத்துறை மற்றும் தொழில் பயிற்சித் துறையின் மீது அந்த பொறுப்பு சார்ந்துள்ளது

தொழிற்பயிற்சி கல்வித்துறையின், புதிய மாற்றத்திற்கு தனியார் துறையினரின் ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் முழு கல்வி முறையையும் மறுசீரமைப்பதற்கு தேவையான சட்டங்கள் விரைவில் கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »