ராகம மற்றும் வல்பொல ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் மரம் விழுந்துள்ளதால் பிரதான பாதையில் ரயில்கள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தோடு கெலிஓயா மற்றும் கம்பளை, தெமோதர மற்றும் ஹாலி எல ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை செல்லும் இரவு நேர தபால் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.