தெமோதர மற்றும் ஹாலிஎல ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (09) காலை ரயில் பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரயில் பாதையை விரைவில் சீரமைக்கும் பணியை ரயில்வே ஊழியர்கள் ஏற்கனவே தொடங்கி விட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மலையகப் பாதையில் ரயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்படக்கூடும் எனவும் நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இந்த நாட்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதால், மலையக ரயில் மார்க்கத்தில் அடிக்கடி மண்சரிவு ஏற்படுவதால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.