மகுலுகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகஸ்வெவ, கலேவெல்ல பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தம்புள்ளை விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொழும்பைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மேலதிக விசாரணைகளுக்காக மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்