Our Feeds


Tuesday, December 5, 2023

News Editor

சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் நாடு கடத்தப்பட்ட மலையகத் தமிழர்கள் மீண்டும் இலங்கைக்கு.... ஜீவன் தொண்டமான்


 சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள், மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் இந்திய உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்று, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களை இந்திய - இலங்கை ஒப்பந்தம் அடிப்படையில் இந்திய பிரஜைகளாக அங்கீகரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இதனை வரவேற்றுள்ள அமைச்சர் ஜீவன் தொண்டான், வரலாற்று தவறை சீர்செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துவருவதாக தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »