கனமழை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள், 50 மீற்றர் தூரத்தில் வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நெடுஞ்சாலை அபிவிருத்தி அதிகார சபையினால், அறிவுறுத்தல்கள், எச்சரிக்கைகள், இலத்திரனியல் பலகைகள் ஊடாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நெடுஞ்சாலைகளில் வெளிச்சம் குறைவாக இருப்பதுடன் இருட்டு தன்மை அதிகரித்துள்ளதால் வாகனங்களின் முன்பக்க பிரதான விளக்குகளை ஒளிரவிட்டு வாகனங்களை இயக்குமாறு, நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார், சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்