தாமரைக் கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சுழலும் உணவகத்தின் திறப்பு விழா தொடர்பான அறிவிப்பை தாமரைக் கோபுர நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில் இன்று குறித்த உணவகம் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று திறக்கப்பப்பட உள்ள இந்த உணவகத்தில் நாளைமுதல் பொது மக்கள் உலகளாவிய பாரம்பரிய உணவுகளை சுவைக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிட்ரஸ் ஹோட்டல் குழுமத்துடன் இணைந்து இந்த உணவகம் பொதுமக்களுக்கு திறக்கப்படவுள்ளது.
தாமரை கோபுரம் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டு 15 மாதங்களுக்கு பின்னர் இந்த சுழலும் உணவகம் திறக்கப்படுவதுடன், ஆரம்ப நிகழ்வில் அரசாங்கத்தின் உயர்மட்ட உறுப்பினர்கள் மற்றும் பன்நாட்டு இராஜதந்திரிகளும் கலந்துகொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.