காஸா அப்பாவிகள் மீதான தாக்குதல்களை நிறுத்தி, இதுவரை கைது செய்யப்பட்டுள்ள பாலஸ்தீனர்களை மொத்தமாக விடுதலை செய்து நிரந்தர யுத்த நிறுத்தத்திற்கு வராத வரை இஸ்ரேலுடன் எவ்விதமான பேச்சுவார்த்தைக்கும் இனிமேல் நாம் தயாரில்லை என பாலஸ்தீன காஸா பகுதியை ஆட்சி செய்யும் ஆளும் கட்சியான ஹமாஸ் இன்று உத்தியோகபூர்வமான அறிவித்துள்ளது.
அல்-ஜெஸீரா சர்வதேச செய்திச் சேவை இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.