Our Feeds


Saturday, December 23, 2023

News Editor

கடலில் மூழ்கி சீன பிரஜை மாயம்


 அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த 54 வயதுடைய சீன பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


காணாமல் போன சீன பிரஜை, பயாகல வடக்கு பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில், அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போதே அலையில் சிக்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


காணாமல் போன நபரை பிரதேசவாசிகள் கடற்கரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடி வருகின்ற போதிலும், நேற்று (21) பிற்பகல் வரை அவர் கண்டுபிடிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »