Our Feeds


Monday, December 4, 2023

News Editor

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் இன்று மீண்டும் திறப்பு


 தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் இன்று (04) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

பகிடிவதை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில் 6 மாணவர்களின் வகுப்புகளுக்கு தடை விதிக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மாதம் 20ஆம் திகதி மாணவர்கள் முகாமைத்துவ பீட பீடாதிபதியின் உத்தியோகபூர்வ அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தியதையடுத்து குறித்த பீடம் தற்காலிகமாக மூடப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »