தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் இன்று (04) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
பகிடிவதை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில் 6 மாணவர்களின் வகுப்புகளுக்கு தடை விதிக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மாதம் 20ஆம் திகதி மாணவர்கள் முகாமைத்துவ பீட பீடாதிபதியின் உத்தியோகபூர்வ அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தியதையடுத்து குறித்த பீடம் தற்காலிகமாக மூடப்பட்டது.