Our Feeds


Wednesday, December 13, 2023

News Editor

இனி விவசாயிகள் வரி செலுத்தத் தேவையில்லை

 


விவசாய நிலங்களுக்கான ஏக்கர் வரி அறவீடுகளை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று (12) தெரிவித்தார்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஏக்கர் வரி என்பது விவசாய நிலத்தில் ஏக்கருக்கு 100 ரூபாய் வீதம் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் சேகரிக்கப்படும் வரியாகும்.

இந்தத் தொகை அரச வருவாயில் வரவு வைக்கப்படும்.

எவ்வாறாயினும், இந்த வரி அறவீடு செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை விட அதனை வசூலிக்க அரசாங்கத்திற்கு அதிக பணம் செலவாகுவதால் ஏக்கர் வரியை அறவிட வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் ஏக்கர் அறவீட்டை முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

பல தசாப்தங்களுக்கு முன்னர், சைக்கிள் உரிமம் மற்றும் வானொலி உரிமம் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் பின்னர் அவை இடைநிறுத்தப்பட்டன. 

எவ்வாறாயினும், ஒரு ஏக்கர் வரி அறவீடு செய்வதன் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட வருமானம் சுமார் ஒரு பில்லியன் ரூபாவாகும்.

இந்த தொகையை விவசாயிகளிடம் இருந்து அறவிடுவது பொருத்தமானதல்ல என ஜனாதிபதி தெரிவித்ததாகவும் அமைச்சர் கூறினார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »