சிலாபம் அம்பகடவில பாடசாலையொன்றில் மதில் இடிந்து வீழ்ந்ததில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை மாணவர்கள் இருவரும் குறித்த அனர்த்தத்துக்குள்ளாகி உள்ளதாக தெரியவந்துள்ளது.
காயமடைந்த மாணவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியதுடன், மற்றைய மாணவர் சிலாபம் பொது வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.