இறக்குமதி செய்யப்பட்ட 6 மில்லியன் முட்டைகளை குளிர்பதனக் கிடங்குகளில் இன்றும் (13) நாளையும் (14) சந்தைக்கு வெளியிட அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
சதொச ஊடாக வாடிக்கையாளர்களுக்கு முட்டைகளை கொள்வனவு செய்ய வாய்ப்பு உள்ளதாக அதன் தலைவர் ஆசிரி வலிசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
சந்தையில் முட்டையின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு பொறுப்பான அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முட்டை விலை 60 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.