Our Feeds


Sunday, December 17, 2023

SHAHNI RAMEES

48 பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை...!

 

மழையுடனான காலநிலையை தொடர்ந்த 11 மாவட்டங்களில் உள்ள 48 பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.



அவற்றில், பதுளை மாவட்டத்தின் ஹாலிஎல, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, பாலிந்தநுவர, கண்டி மாவட்டத்தின் யட்டிநுவர, தும்பனை மற்றும் பஸ்பாகே, கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட, மாத்தறை மாவட்டத்தின் அத்துரலிய மற்றும் பஸ்கொட மற்றும் கிரியெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 



இரத்தினபுரி மாவட்டத்தில் நிவிதிகல, இம்புல்பே, கலவான மற்றும் பலாங்கொட ஆகிய இடங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »