Our Feeds


Wednesday, December 20, 2023

Anonymous

ஒரே நாளில் கைது 2,296 பேர் கைது - ஏன்?

 



இன்று அதிகாலை 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 2,296 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.


கைது செய்யப்பட்டவர்களில் 109 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், 14 சந்தேக நபர்கள் தொடர்பில் சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் 184 பேர் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 218 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, பெருமளவான சட்டவிரோத போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிடுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »