Our Feeds


Thursday, December 7, 2023

Anonymous

பசறையில் 200 அடிக்கு தாழிறங்கியநிலம் – அச்சத்தில் மக்கள்

 



பதுளை மாவட்டத்தில் நேற்றைய தினம் பல இடங்களில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்த நிலையில், பசறை பிரதேசத்தில் 13 ஆம் கட்டை பகுதியில் பாரிய நிலம் சுமார் 200 அடியை கடந்து தாழிறங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். 

மாலை 4.15 அளவில் ஏற்பட்ட பாரிய இடி முழக்கத்தை அடுத்து அப்பகுதியில் கண்ணிமைக்கும் தருணத்தில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது. 

இந்த அனர்த்தத்தை தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த அனர்த்த முகாமைத்துவ குழு அவ்விடத்தை பாதுகாப்பற்ற இடமாக அறிவித்ததுடன். வீதியில் பாதுகாப்பு வேலியை அமைத்துள்ளனர். எனினும் இப்பகுதி தொடர்ந்தும் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »