கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற சுமார் 139 கைதிகளில் 126 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட கைதிகளில் 44 பேர் புலஸ்திபுர பொலிஸ் நிலையத்திலும், 23 பேர் பொலன்னறுவை பொலிஸ் நிலையத்திலும், 34 பேர் ஹிங்குராங்கொட பொலிஸ் நிலையத்திலும், மேலும் 25 பேர் மீகஸ்வெவ பொலிஸ் நிலையத்திலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், தப்பியோடிய மேலும் 13 கைதிகளை தேடும் பணியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையமும் அதன் பிரதேசமும் தற்போது அமைதியாக இருப்பதாக இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.