காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் இன அழிப்பு போரினால் இதுவரை காஸாவில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். 27 மருத்துவமனைகள் 200 க்கு மேற்பட்ட மதத்தளங்கள் மற்றும் 3 லட்சத்திற்கு மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், உலக பணக்காரரும், எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், எக்ஸ் வலைத்தளத்தின் விளம்பரம் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானம், போரில் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளை சீரமைக்கவும், காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் நன்கொடையாக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.