நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் நேற்று (03) நள்ளிரவு ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் 69 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை தற்போது 128 ஆக உயர்வடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க புவியியல் மையம், குறித்த நிலடுக்கம் முதற்கட்ட அளவில் 5.6 ரிச்டர் ஆக பதிவானதாகவும், 11 கிலோமீற்றர் மைல் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
அதன்பின் 6.4 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தின் நிலநடுக்கம் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி தேசிய மையம், நேபாளம் தலைநகர் காத்மாண்டில் இருந்து 250 கிலோமீற்றர் மைல் தூரத்தில் உள்ள ஜாஜர்கோட், நிலநடுக்கத்தின் மையப்புள்ளியாக இருந்தது என தெரிவித்துள்ளது.