Our Feeds


Tuesday, November 28, 2023

SHAHNI RAMEES

#Update:உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கியிருந்த 12 தொழிலாளர்கள் முதற்கட்டமாக மீட்பு

 

 உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களில் முதற்கட்டமாக 12 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்..

 

 மாநிலத்தின் உத்தரகாசியில் கடந்த மாதம் 11 ஆம் திகதி நடந்த சுரங்கப்பாதை விபத்தில் தொழிலாளர்கள் 41 பேர் சிக்கிக் கொண்டுள்ள நிலையில் தொடர்ந்து இன்று 17-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

 

சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் 41 பேரில் 15 பேர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். உத்தர பிரதேசம் (8 பேர்), பீகார் (5 பேர்), ஒடிசா (5 பேர்), மேற்கு வங்காளம் (3) பேர், உத்தரகண்ட் (2 பேர்), அசாம் (2 பேர்), இமாசல பிரதேசம் (1) ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அடங்குவர்.

 

இவ்வாறு மீட்கப்பட்ட தொழிலாளர்கள் அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »