அம்பாறை, மாயாதுன்ன பகுதியில் நேற்றிரவு (06) இடம்பெற்ற
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிந்துள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையினை பண்டாரதுவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.