திருகோணமலையில் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக
புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவிக்கின்றது.
இந்த நிலநடுக்கம் திருகோணமலை – மொரவெவ பகுதியில் 3.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் பணியகம் குறிப்பிடுகின்றது.
இன்று பிற்பகல் 1:15 அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.