Our Feeds


Wednesday, November 29, 2023

News Editor

ஒரு ஹெக்டேர் காபி பயிர்ச்செய்கைக்கு ஒரு மில்லியன் ரூபா




 அடுத்த வருடம் முதல் புதிதாக ஆரம்பிக்கப்படும் ஒரு ஹெக்டேர் காபி பயிர்ச்செய்கைக்கு ஒரு மில்லியன் ரூபாவை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு அடுத்த வருடம் 400 ஹெக்டேர் காபியை நடுவதற்கு தீர்மானித்துள்ளதுடன், இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 400 மில்லியன் ரூபாவாகும்.

இலங்கையில் பிரதான பெருந்தோட்டப் பயிராக காபி பயிரிடப்படாவிட்டாலும், வெளிநாட்டு சந்தையில் காபிக்கான அதிக தேவையை கருத்தில் கொண்டு, காபி செய்கையை மீண்டும் ஒரு பெருந்தோட்டமாக பிரபலப்படுத்தும் நோக்கில் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

Coffea Arabica (அரேபிகா காபி), Coffea Canephora (ரோபஸ்டா காபி), Libarica (லைபெரிகா காபி) ஆகியவை இந்த நாட்டில் பயிரிடப்படுகின்றன. அரேபிகா காபி மிகவும் பிரபலமான காபி வகை என்றும், அதன் பயிர்ச்செய்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »