Our Feeds


Thursday, November 9, 2023

News Editor

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும்


 இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உரியநேரத்தில் தேர்தல்கள் இடம்பெறுவது ஜனநாயகத்திற்கு மிக அவசியமான விடயமாகும். எனவே இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசமைப்பின்  அடிப்படையில் ஏனைய தேர்தல்களும் இடம்பெறும் என அமெரிக்கா நம்பிக்கை கொண்டுள்ளது. இந்தவிடயங்கள் அனைத்தும் மக்களிற்கான குரல்களை வழங்கும். அவர்கள் வாக்களிப்பின் மூலம் தங்கள் கருத்துக்களை வெளியிடமுடியும். தங்கள் தலைமையை தெரிவு செய்ய முடியும்.

அடுத்தவருடம் நடைபெறவேண்டிய தேர்தல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம். சுதந்திரமான நியாயமான தேர்தல் இடம்பெறுவதை எதிர்பார்த்துள்ளோம்,என அவர் மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »