Our Feeds


Tuesday, November 21, 2023

News Editor

பெண்கள் பாடசாலையில் இடிந்து விழுந்த சுவர்


 கடும் மழை காரணமாக வத்தேகம மகளிர் கல்லூரியின் ஆரம்பப் பிரிவுக்கு அருகாமையில் இருந்த சுவர் இடிந்து வீழ்ந்துள்ளது.

வத்தேகம பிரதேசத்தில் நேற்று (20) பிற்பகல் முதல் கடும் மழை பெய்து வருகின்றதுடன், இதன் காரணமாக பாடசாலையின் பல கட்டடங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதனையடுத்து, பாடசாலை வளாகத்தை இராணுவத்தினர் துப்பரவு செய்து வருவதுடன் மாகாண கல்வி திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய இன்று (21) மற்றும் நாளை (22) பாடசாலையை மூடுவதற்கு பாடசாலை அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததால் பாடசாலை கட்டட வளாகம் குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »