Our Feeds


Monday, November 6, 2023

SHAHNI RAMEES

கிரிக்கெட்டால் கொழும்பு அரசியலில் குழப்பம்...!

 





அதிவிசேட வர்த்தமானி ஒன்றினூடாக இலங்கை

கிரிக்கெட் சபையை கலைத்து புதிய நிர்வாக இடைக்கால குழுவை அமைத்து விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க மேற்கொண்ட நடவடிக்கை இன்று மாலை அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




அமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எந்தவித முன்னறிவித்தல்களும் செய்யப்படாததால் இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் கடும் விசனமடைந்திருப்பதாக அறியமுடிகின்றது.




எவ்வாறாயினும் அமைச்சரின் உத்தரவை வாபஸ்பெறுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டால் விளையாட்டுத்துறை அமைச்சுப் பொறுப்பில் இருந்து ரொஷான் இராஜினாமா செய்யக்கூடுமென அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.




இலங்கை கிரிக்கெட் சபை உடனடி மறுசீரமைப்புக்கு உள்ளாக்கப்படவேண்டுமென்ற நிலைப்பாட்டில் அமைச்சர் ரொஷான் உறுதியாக இருப்பதாக அறியமுடிகின்றது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »