தகுதி நீக்கம் செய்யப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற
உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹ்மத் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென தெரியவருகிறது.முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ஹாபிஸ் நஸீர் அஹ்மதுக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் தாக்கல் செய்த வழக்கில் அவருடைய எம்.பி பதவி பறிக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானை நீக்கிவிட்டு ஹாபிஸ் நஸீரை கிழக்கு ஆளுனராக ஜனாதிபதி நியமிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வரும் நிலையில் இதன் உண்மைத் தன்மை தொடர்பில் ShortNews விசாரித்ததில் அடுத்த தேர்தல் வரை கிழக்கு ஆளுனர் உள்ளிட்ட ஆளுனர் பதவிகளில் எவ்வித மாற்றமும் செய்யும் எண்ணம் ஜனாதிபதிக்கு கிடையாது என தெரியவந்துள்ளது.