குடா கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.
இதன் காரணமாக புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்த நுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வெள்ள அபாயம் நிலவுகிறது என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 06 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் செக்கனுக்கு 8400 கன அடி நீர் விடுவிக்கப்படுகின்றது.