தரமற்ற ஹியூமன் இம்யூனோ குளோபியுலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை நாட்டுக்கு இறக்குமதி செய்தார் என கூறப்படும் நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரத்தொலுகம பகுதியைச் சேர்ந்த 57 வயதான ஒருவர் கொள்ளுபிட்டியில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.