இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் போர் என்பதைத் தாண்டி பயங்கரவாதமாக மாறியுள்ளது என பாப்பரசர் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் படையினரால் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்களின் உறவினர்களுடனும், காஸாவிலுள்ள பாலஸ்தீன குடும்பங்களுடனும் தனித்தனியாக சந்திப்புக்களை மேற்கொண்ட பின்னரே பாப்பரசர் பிரான்ஸிஸ் மேற்கண்டவாரு தெரிவித்துள்ளார்.
“இங்கு நாம் போருக்கு அப்பால் சென்று விட்டோம். இது போர் அல்ல தீவிரவாதம்” என்று அந்த சந்திப்பின் பின் அவர் தெரிவித்துள்ளார்.