Our Feeds


Sunday, November 26, 2023

News Editor

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை மிதக்கத் தொடங்கியுள்ளது



சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உடைந்து மிதக்கத் தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அண்டார்டிகாவைச் சேர்ந்த இந்த மிகப்பெரிய பனிப்பாறை A23a என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இது 1,540 சதுர மைல் அளவு கொண்டது. பனிப்பாறையின் தடிமன் 1,312 அடி.

இந்த பனிப்பாறை கடந்த 30 ஆண்டுகளாக கடற்பரப்புடன் இணைந்திருந்ததாகவும், தற்போது புவி வெப்பமடைதல் மற்றும் பனி உருகுவதன் விளைவாக உடைந்து மிதந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் மேலும் விளக்கமளிக்கின்றனர்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »