ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இன்று பாராளுமன்றத்தில் பல விடயங்கள் தொடர்பில் காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது.
இருவருக்குமிடையிலான வாக்குவாதத்தின் போது, மைக் மற்றும் வீடியோ கெமராக்களை நிர்வகிப்பவர்கள் ஓரளவுக்கு செயற்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தினார்.
"மைக்குகள் மற்றும் வீடியோ கெமராக்களை நிர்வகிப்பவர்கள் ஓரளவு செயல்படவில்லை. ஒளிப்பதிவு சரியான வரிசையில் செய்யப்படுகிறதா என்பதை உறுதிசெய்ய தலைமைக்கு அறிவுறுத்தவும். நான் இவற்றைப் பார்க்கிறேன். இது நியாயமற்றது. தயவு செய்து பாரபட்சமாகவும், பக்கச்சார்பாகவும் இருக்க வேண்டாம்,'' என்றார்.
அப்போது எழுந்து நின்ற ஜனாதிபதி, “மாண்புமிகு தலைவரே, நான் அவருடன் உடன்படுகிறேன். தயவு செய்து அவர் மீது எப்போதும் கெமராக்களை வைத்திருங்கள். அவற்றின் கவனத்தை என் மீது வைக்க வேண்டாம்”
எதிர்க்கட்சித் தலைவர், “திரு. ஜனாதிபதி அவர்களே, இது ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அல்ல. வார்த்தைகளைத் திரிக்காதீர்கள். நான் ஒருபோதும் அப்படி சொல்லவில்லை. என் வார்த்தைகளை திரிக்க வேண்டாம். நான் சொன்னதை மாற்றி தவறாக விளக்கமளிக்க வேண்டாம்” என்றார்.
“ கெமராக்கள் எப்போதும் உங்கள் பக்கமே இருக்க வேண்டும் என நான் ஒரு கோரிக்கையையே வைக்கிறேன்" என்று ஜனாதிபதி பதிலளித்தார்.