அரச இராணுவத்துடன் அல்லது
புலானாய்வுத்துறையினரின் அனுசரணையுடனே மட்டக்களப்பு - வாகரை கல்லடியில் அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லம் விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.குறித்த இடத்திற்கு இன்று (26) விஜயம் மேற்கொண்ட போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“2023 கார்த்திகை மாதத்தில் இந்த வாரம் தமிழர்களுக்கு முக்கியமான வாரமென்பது தமிழர்களுக்கு தான் தெரியும். விடுதலை பேராட்டம் இந்த மண்ணுக்காக பேராடி இந்த மண்ணிலே எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக வாழ வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக ஒரு விடுதலை பேராட்டத்தில் ஈடுபட்டு இலட்சக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்கள் இராணுவத்தினரால் மாறி மாறி வந்த சிங்கள அரசாங்கத்தினரால் கொல்லப்பட்டனர்.
அதைப்போல இறுதி யுத்தத்தில் ஆயிரக்கணக்கான மக்களை கொத்து கொத்தாக கொன்றனர். அவ்வாறான நிலையில் இந்த வாரத்தில் விடுதலை போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிற்பாடும் தமிழ் மக்கள் தங்கள் இழந்த உறவுகளை நினைவுகூறும் வகையில் வடக்கு கிழக்கில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன ”என தெரிவித்தார்.