Our Feeds


Thursday, November 30, 2023

News Editor

கடமைகளை பொறுப்பேற்ற பதில் பொலிஸ் மா அதிபர்


  

புதிய பதில் பொலிஸ் மா அதிபராக பதவியேற்றுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

 

அனைத்து மத சடங்குகளுக்கு மத்தியில் தேஷ்பந்து தென்னகோன் பதவியேற்ற நிலையில் பல பொலிஸ் உயர் அதிகாரிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

பல நாட்களாக வெற்றிடமாக பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமாக இருந்த நிலையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை பதில் பொலிஸ் மா அதிபராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (29) நியமித்தார்.

 

இதன்படி மேல் மாகாணத்திற்கு பொறுப்பாக இருந்த தேசபந்து தென்னகோன் 03 மாத காலத்திற்கு பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இதேவேளை, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் நியமனம் தொடர்பில் அரசியலமைப்புச் சபைக்கு அறிவிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »