தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் ஐந்து திறக்கப்பட்டுள்ள நிலையில், தெதுரு ஓயாவை அண்மித்த தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெதுரு ஓயாவின் நீரேந்து பிரதேசங்களில் நேற்று (03) பெய்த கன மழையினால் தெதுரு ஓயா நீர்த்தேக்கம் மீண்டும் நிரம்பி வழிகிறது.
அதனால் இன்று (04) அதிகாலை முதல் நீர்த்தேக்கத்தில் 05 வான் கதவுகள் திறக்கப்பட்டதாக நீர்த்தேக்கத்தின் நீர்ப்பாசன பொறியியலாளர் சம்பத் சமரஜீவ தெரிவித்தார்.
05 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால் தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து தெதுரு ஓயாவிற்கு வினாடிக்கு 13 ஆயிரத்து 800 கன அடி நீர் பாயுமென பொறியியலாளர் தெரிவித்தார்.
இந்த நிலைமை தெதுரு ஓயாவின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள நிலைமை இல்லையென்றாலும், மழை நிலைமை தொடர்பில் தெதுரு ஓயாவுக்கு அண்மித்த தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.