Our Feeds


Tuesday, November 21, 2023

Anonymous

திருப்பியனுப்பப்பட்ட மாணவர்கள் | பசறை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடந்தது என்ன?

 



பதுளை மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பல்வேறு பிரதேசங்களிலும் அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ள நிலையில். பசறை பிரதேசமும் பல்வேறு அனர்த்தங்களை சந்தித்துள்ளது.  


நேற்று பெய்த கடும் மழையால் பசறை தமிழ் மகா வித்தியாலயத்தில் மஹிந்தோதயா கட்டத்தில் முறையான வடிகால் அமைப்பு இல்லாத காரணத்தால் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


இதனால் இன்றைய தினம் தரம் 3,4,5 மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடு நடைபெறாமல் மாணவர்கள் வீட்டிற்கு திருப்பியனுப்பட்டனர்.


அத்தோடு மேலுமொரு ஆரம்பப்பிரிவு கட்டடம் பாதிப்புக்கு உள்ளாகி தொடர்ந்து மண்சரிந்து விழும் அபாயத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »