Our Feeds


Tuesday, November 14, 2023

Anonymous

ஈஸ்டர் தாக்குதல் நஷ்டஈடு - மைத்திரி உள்ளிட்டவர்கள் வைப்பிலிட்டுள்ள தொகை எவ்வளவு தெரியுமா?

 



உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்  நட்டஈடு செலுத்தல் தொடர்பில் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இன்று பாராளுமன்றில் கருத்துத் தெரிவித்தார்.


மைத்திரிபால சிறிசேன, பூஜித ஜயசுந்தர, நிலந்த ஜயவர்தன, ஹேமசிறி பெர்னாண்டோ, சிசிர மென்டிஸ், ஆகியோர் இழப்பீட்டு  அலுவலக நிதிய கணக்கில் 3 கோடியே 68 இலட்சத்து 25 ஆயிரத்து 88 சதம் ரூபா வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, முழுமையாக தொகை வைப்பிலிடப்பட்டதும் பாதிக்கப்பட்டோருக்கு நீதிமன்றத்தின் கண்காணிப்புடன் நட்டஈடு செலுத்தப்படும் என்றும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »