Our Feeds


Saturday, November 18, 2023

News Editor

இன்று முதல் தாமரைக் கோபுரத்தில் ‘பேஸ் ஜம்ப்’ சாகச விளையாட்டு ஆரம்பம்


 கொழும்பு தாமரை கோபுரத்தில் ‘பேஸ் ஜம்ப்’ என்ற சாகச நிகழ்வு இன்று(18) முதல் ஆரம்பிக்கப்படும் என தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.


அதன்படி, இன்றும் நாளையும் (19) காலை 9 மணி முதல் இந்நிகழ்வு ஆரம்பிக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.


நேற்று(17) இதற்கான முன்னோடி நிகழ்வு நடத்தப்பட்டதில் 6 சர்வதேச பேஸ் ஜம்ப் வீரர்கள் கலந்துகொண்டு சாகச நிகழ்வை நடத்தினர்.


தாமரைக் கோபுரத்தின் 29 ஆவது மாடியில் இருந்து இந்த வீரர்கள் குதித்து சாகச நிகழ்வை நடத்தினர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »