பாடசாலை மாணவர்களுக்கு பலவந்தமாக லஞ்ச் ஷீட்டை உண்ண கொடுத்தாக கூறப்படும் நாவலப்பிட்டி ரம்புக்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் கம்பளை கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை இலகுபடுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.