Our Feeds


Monday, November 27, 2023

News Editor

நாட்டில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


 நாட்டில் 1300 பேர் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

இந்த வருடம் ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் நாட்டில் 1,256 தொழு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது . 

கொழும்பில் 256 தொழுநோயாளர்களும் மட்டக்களப்பில் 130 தொழுநோயாளர்களும் களுத்துறையில் 92 தொழுநோயாளர்களும் பதிவாகியுள்ளனர் . 

நாட்டில் அண்மைக்காலமாக தொழுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »